Tamil Cinema | Kollywood | Tamil Movies

"ரஜினி ஓ.கே., பாண்ட் வேண்டாம்"
[ Sunday, 30 November 2008, 05:28.47 PM GMT +05:30 ]

ஒரே சமயத்தில் டேணியல் கிரேக் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் ரஜினியைத்தான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார் முன்னாள் பிரபஞ்ச அழகி பிரியங்கா சோப்ரா.

தமிழன் என்ற படத்தோடு தமிழுக்கு குட்பை சொல்லி விட்டுப் போனவர் பிரியங்கா. அதன் பிறகு பாலிவுட்டில் விதம் விதமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனக்கும், தமிழுக்கும் இன்னும் டச் விட்டுப் போய் விடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ரஜினியுடன் நடிப்பதையே விரும்புகிறேன், ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேணியல் கிரேக் தேவையில்லை என்று கூறியிருக்கிறார் பிரியங்கா.

சென்னையில் நடந்த விழா ஒன்றில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவரை நோக்கி ஏராளமான கேள்விகளை செய்தியாளர்கள் வீசினர். அத்தனைக்கும் புன்னகை மாறாமல் பதிலைத் தந்தார் பிரியங்கா. ஒரே நேரத்தில் டேணியல் கிரேக் மற்றும் ரஜினியுடன் நடிக்கும் வாய்பு வந்தால் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்ற ரொம்ப கஷ்டமான கேள்வியை ஒரு செய்தியாளர் போட்டு விட்டு பிரியங்காவின் முகத்தைப் பார்த்தார்.

அதற்கு சற்றும் சளைக்காமல் பதிலளித்த பிரியங்கா, ரஜினி என்றார். தொடர்ந்து, டேணியல் கிரேக்கும் சிறந்த நடிகர்தான் என்றார் பிரியங்கா. தமிழனுக்குப் பிறகு ஏன் தமிழுக்கு வரவில்லை என்று கேட்டபோது, மொழிப் பிரச்சினை, பாஷைப் பிரச்சினை என பல இருக்கிறதே என்றார் பிரியங்கா.

முன்னதாக நிகழ்ச்சிக்கு லேட்டாக வந்தார் பிரியங்கா. இருந்தாலும் சின்னதாக ஒரு சாரி கேட்டுக் கொண்ட பிரியங்கா, தனது கையில் கட்டியிருந்த சூப்பர் வாட்ச்சை அனைவருக்கும் காட்டி நல்லாருக்கா என்று கேட்கத் தவறவில்லை.

அதன் விலை என்ன தெரியுமா? ஜஸ்ட் ரூ. 3 லட்சம்தானாம்!

 

<< முன்செல்ல