Tamil Cinema | Kollywood | Tamil Movies

நான் - ஸ்ரேயா-த்ரிஷா : ரீமாசென்னின் பார்ட்டி அனுபவம்
 [ Sunday, 07 December 2008, 07:21.01 PM GMT +05:30 ]

பிரபலங்கள் பார்ட்டிக்கு போவது கூட இப்போது பிரபலமாகி வருகிறது. தனது பார்ட்டி அனுபவங்களை பச்சை தண்ணி குடிப்பதுபோல சர்வசாதாரணமாக பகிர்ந்துகொள்ளும் ரீமாசென்னுக்கு “ஓபன் டைப்” பட்டம் கொடுக்கலாம். ரொம்ப நாளாக காணாமல் போயிருந்த ரீமாசென் இப்போ சென்னை பக்கம் தலை காட்ட ஆரம்பித்துள்ளார். இரண்டு வருஷமா “ஆயிரத்தில் ஒருவன்” ஷூட்டிங்க் நடந்தது. இவ்வளவு நாள் ஆகும் என்று தெரிந்தே தான் கால்ஷூட் கொடுத்தேன். செல்வா படம் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து 21 நூற்றாண்டுவரை நடக்கும் கதை என்பதால் டைம் எடுத்து இயக்கியுள்ளார். இந்தப் படத்துல வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான க்ளாமர் ரோல்தான். ஆனா ஆபாசமா இருக்காது.

என்னோட ஆண்ட்ரியாவும் நடிக்கிறாங்க. இரண்டுபேருக்கும் இடையில ஈகோ புகுந்து டிஷ்யூம் ஆயிடிச்சுன்னு பத்திரிக்கையில கொளுத்திப்போட்டாங்க. ஆன அது உண்மையில்லை. இப்பல்லாம் கிசுகிசு பத்தி கவலைப்படுறதேயில்லை.”

தோழிகளுடன் சேர்ந்து “பார்”ட்டிக்கு போறிங்களாமே? அதுவும் கிசுகிசா..?

அது உண்மைதான். நான் ஏன் அதை மறைக்கனும் ? பார்ட்டிக்கு போவது சாதாரணமான விஷயம். இதை மீடியா பெரிசாக்கி பார்ப்பதுதான் காமெடியாக தெரிகிறது. சினிமாவில் என்னோட பெஸ்ட் ப்ரண்ட்ஸ் த்ரிஷாவும் ஸ்ரேயாவும். நாங்க மூணுபேரும் சேர்ந்துதான் பார்ட்டிக்கு போவோம். செம ஜாலியா பார்ட்டிய என்ஜாய் பண்ணுவோம் இதில் எந்த தவறும் இருப்பதாக தெரிவதில்லை.

பார்ட்டி இருக்கட்டும் படங்கள் வாய்ப்பு எப்படியிருக்கு..?

கடந்த இரண்டு வருடங்களாக நிறைய படங்களில் நான் கமிட் ஆகவில்லை. அடுத்தவருடம் நிறைய தமிழ் படங்களில் நடிப்பதென முடிவுசெய்துள்ளேன். இப்போதைக்கு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் “மாலா மால் வீக்லி -2 “ என்ற மலையாள படத்தில் நடிக்க ஓப்பந்தமாகியுள்ளேன். அவ்வளவு தான்.

இது போதுமே..!



<< முன்செல்ல