Tamil Cinema | Kollywood | Tamil Movies

2 வருட ஒப்பந்தம் போட்டு தொல்லை; அமீர்கானுடன் அசின் மோதல்

கஜினி படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பில் அமீர்கானுக்கும் அசினுக்கும் காரசார மோதல் ஏற்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடித்து தமிழில் `ஹிட்'டான இப்படத்தை இந்தியில் எடுக்க தயாரான போது தமிழ் பதிப்பில் நடித்த அசினையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். அமீர்கான் அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இரு வருடங்களுக்கு அசினிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. படத்தின் கதை பற்றியோ, கேரக்டர் பற்றியோ பேட்டி அளிக்க கூடாது. வேறு படங்களில் நடிக்க கூடாது. அழைக்கும் போதெல்லாம் படப்பிடிப்புக்கு வரவேண்டும். என்றெல்லாம் நிறைய கட்டுப்பாடுகள் விதித்தனர். கஜினியில் அசின் நடித்த ஸ்டில்களையும் வெளியிடாமல் தடுத்தனர். சில நேரங்களில் அசின் மீது அமீர்கான் கோப்பட்டு எரிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கஜினி முடிவது வரை அசின் மன அழுத்தத்தில் இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். கஜினியில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோது பெரிய கம்பெனிகளிடம் இருந்து புதுப்பட வாய்ப்புகள் வந்தது அவற்றுக்கு கால்ஷீட் கொடுக்க அசின் விரும்பினார். ஆனால் கஜினி முடிவது வரை எந்த படத்துக்கும் ஒப்பந்தம் ஆகக்கூடாது என்று அமீர்கான் தடை விதித்தார். அவர் இந்திப்பட உலகில் பிரபலமாகி விடக்கூடாது என்பதற்காக கஜினியில் நடித்த ஸ்டில்களையும் வெளியிடாமல் தடுத்தார். தனிப்பட்ட முறையில் தன்னை விளம்பரபடுத்தவும் வாய்ப்பு பிடிக்கவும் அசினால் முடியவில்லை. ஒருநாள் நேரடியாகவே மனக்குறையை அமீர்கானிடம் கொட்டி குமுறியுள்ளார். அவர் கண்டு கொள்ளவில்லையாம். ஒரு வழியாக இப்போது அதிலிருந்து மீண்டு லண்டன் டிரீம்ஸ் படத்தில் நடிக்கிறார். இந்த படக்குழுவினரிடம் கஜினியில் தான் பட்ட கஷ்டங்களை சொல்லி புலம்பி வருகிறார் அசின். கஜினி பட தயாரிப்பாளர் மதுவர்மா அப்படத்தில் அசினுக்கு இருவருட ஒப்பந்தம் போட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார்.

கஜினியில் நடித்த எல்லா நடிகர்களுக்குமே இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

 

முன்செல்ல