அப்பா சத்யராஜின் பார்முலாவை பாலோ பண்ண ஆரம்பித்துவிட்டார் சிபிராஜ். நெகட்டிவ் ரோல் கதைகளை விரும்பி கேட்கிறாராம். அதன்படி 'நாணயம்' படத்தில் முதல் முறையாக கெட்டவனாக நடிக்கிறாராம். பிரசன்னா கதாநாயகனாக நடிப்பதாக இருந்த படம் ‘நாய்குட்டி'. அப்படத்தின் பிரச்சனை இன்னும் வாலாட்டிக்கொண்டிருப்பதால் அடுத்த படத்தில் நடிக்க ஆயத்தமாகிவிட்டார். இதற்காக ஜிம்மிற்கு சென்று உடம்பை ஜம்மென்று மாற்றிவருகிறாராம்.
இந்த மாற்றமெல்லாம் எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் படத்திற்காகவாம். வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஷக்தி என்பவர்தான் அப்படத்தை இயக்கவுள்ளாராம். முதலில் 'பரமபதம்' என பெயரிடப்பட்டிருந்த அப்படத்தின் தலைப்புக்கு வேறொரு இயக்குனர் உரிமை கொண்டாடியதால் இப்போது ‘நாணயம்' என பெயரிட்டுள்ளனர்.
நாணயம் என்பது நேர்மையான என்றும் இரு பக்கங்களை கொண்ட நாணயம் என்றும் பொருள் கொள்ளலாம். கதையின் நாயகர்களாக பிரசன்னா, சிபிராஜ் இருவரும் நடிக்கின்றனர். இதில் பிரசன்னா நல்லவன் வேடத்திலும், சிபிராஜ் கெட்டவன் வேடத்திலும் நடிக்கின்றனராம். கதாநாயகனாக நடித்ததைக்காட்டிலும் சத்யராஜ்க்கு திருப்புமுனையை கொடுத்ததும் ரசிகர்களை கவனிக்க வைத்ததும் நெகட்டிவ் ரோல்கள்தான். தனக்கும் அம்மாதிரியான பெரிய பிரேக் கிடைக்கவேண்டும் என்பதாலேயே நெகட்டிவ் ரோலை விரும்பி ஏற்றுள்ளாராம் சிபிராஜ்.
முன்செல்ல