விஜய்க்காக எழுதப்பட்ட கதை தெனாவட்டு. அவர் வீட்டு காலிங் பெல்லை அடித்தே கை ரேகை தேய்ந்து போன இயக்குனர் வி.வி.கதிர். அதன்பின் இந்த கதையை முன்னணி ஹீரோக்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார். கடைசியாக ஜீவாவிடம் சொல்ல, அசந்து போனாராம் அவர். நாளைக்கே நான் ரெடி என்று சொல்லி இரண்டு வருஷமாச்சு. சற்று தாமதம் ஆனாலும், படம் பிரமாண்டமாக வந்திருப்பதில் அத்தனை பேருக்கும் சந்தோஷம். அதே நேரத்தில் வெளியே சொல்ல முடியாத வருத்தமும் ஒன்று இருந்ததாம் கதிருக்கு. படத்தை வாங்கிய சன் நிறுவனம், இந்த படத்தை காதல் படம் என்ற பாணியிலேயே பிரமோஷன் செய்து வருகிறது. காதல் மூடோடு தியேட்டருக்கு வருபவர்கள், படத்தில் இடம்பெறும் இரத்த களரி சண்டைகளை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இது ஆக்ஷன் படம் என்ற கோணத்தில் விளம்பரம் செய்தால் சரியாக இருக்குமே என்று நினைத்தாராம்.
யார் சொன்னார்களோ? இவர் சொல்வதற்கு முன்பே முந்திக்கொண்ட சன் நிறுவனம், தற்போது வரும் டிரெய்லர்களில் ஆக்ஷன் இமேஜ் காட்டி வருகிறது. பஞ்ச் டயலாக், ஒரே ஹீரோ பத்து பிம்பங்களாக பிரிந்து சேர்வது என்று கடைகோடி ரசிகன் கூட விசில் அடிக்கிற மாதிரி படத்தை உருவாக்கியிருக்கிறாராம் கதிர்.