Tamil Cinema | Kollywood | Tamil Movies

பருத்தி வீரன் கார்த்தி, இனி கன்னித்தீவு கார்த்தி?
[ Friday, 14 November 2008, 03:49.07 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

கன்னித்தீவும் கார்த்தியும் என்றால் பொருத்தமாக இருக்கும். பருத்தி வீரன் கார்த்தி, கன்னித்தீவு கார்த்தியான கதைதான் இது! அறிமுகப் படத்திலேயே அலுத்துக் கொள்கிற அளவுக்கு இழுவையோ இழுவையாக நடந்தது படப்பிடிப்பு. தேனி ஏரியாவுக்கே ஜாகையை மாற்றிக் கொள்ளலாமா என்று யோசிக்கிற அளவுக்கு அங்கேயே 500 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தினார் அமீர். முதல் படத்தின் கட்டாயம் இப்படி என்றால், இரண்டாவது படத்தில் அழாத குறையாகி விட்டது அவரது நிலைமை. செல்வராகவன் இயக்கி வரும் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போகிறது. இடையில் இந்த படமே வேண்டாம் என்று அப்பா சிவகுமாரிடம் குமுற ஆரம்பித்தாராம் கார்த்தி. முதல் படத்திலேயே இயக்குனரோடு மோதல் என்று கெட்ட பேர் வாங்கியாச்சு. அதனால் சிரமப்பட்டாலும் பரவாயில்லை. படத்தை முடிச்சு கொடுத்திட்டு வா என்று அப்பா கட்டளை போட்டுவிட்டார். 500 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு.

அடுத்ததாக லிங்குசாமி படம். இந்த படத்தை பொருத்தவரை பிரச்சனை அதிகம் இல்லை. ஆனால் செல்வா விட்டால்தானே? லிங்கு படத்திற்கு பிறகு கார்த்தி எடுத்திருக்கும் ரிஸ்க் இருக்கிறதே, அதுதான் பயங்கரம். பாலா படத்தில் நடிக்கிறாராம். நான் கடவுள் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. கடவுளே இறங்கி வந்து எப்பப்பா ரிலீஸ்? என்றால் கூட, இன்னும் ரெண்டு சீன் இருக்கு என்பார் போலிருக்கிறது பாலா. இந்த லட்சணத்தில் இவரது அடுத்த படத்தின் ஹீரோ கார்த்திதானாம்.

நான் கடவுள் படத்தை வாங்கியிருக்கும் ஜீ தமிழ் டி.வி, பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறது. பாலா, கார்த்தி, இருவருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதாகவே பேச்சு உலவுகிறது. அட்வான்ஸ் கொடுத்த நாளில் இருந்தே விரட்ட ஆரம்பிங்க சாமீய்...  

முன்செல்ல