சிவாஜி படத்திலேயே ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று விரும்பிய ரஜினிக்கு, எந்திரனில்தான் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேக்கப் போடுகிறவரைதான் ரஜினி ஜிப்பா! போட்டுவிட்டால் அப்பப்ப்பா...! இந்த ஆச்சர்யத்தை நேரில் பார்த்து வியந்தே போனாராம் ஐஸ். மும்பை பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் ரஜினி பற்றி வியந்ததுதான் அதிகம். ரஜினி மிகச்சிறந்த நடிகர். அவரது வேகமான நடை, சுறுறுப்பான நடிப்பு, விதவிதமான ஸ்டைல் போன்றவற்றை நேரில் பார்த்து பிரமித்து போனேன். கோமிரா முன்பு எப்படி நடித்தால் எடுபடும் என்பதை துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறார். அவரிடம் இருந்து நடிப்பு பற்றி கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. உலக நடிகர்கள் அத்தனை பேரின் நடிப்பையும் ரஜினியிடம் காண முடிகிறது. அவர் எவ்வளவுதான் திறமையானவராக இருந்தாலும், படப்பிடிப்பின் போது பந்தா எதுவும் இல்லாமல் சாதாரண மனிதராகதான் பழகுகிறார்.
தனது நடிப்பு பற்றி லைட் மேன், மேக்கப் மேன் ஆகியோரிடம் கூட கருத்து கேட்கிறார். அவரது இந்த அடக்க குணம் மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பின் போது எனக்கும் நடிப்பு சொல்லிக் கொடுக்கிறார். எந்திரன் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெரும் என்று கூறியிருக்கிறார் ஐஸ்! ஒரு கூடை சன் லைட்டை மேலே தெளிச்ச மாதிரி இருக்குமே?
முன்செல்ல