“மர்மயோகி” பற்றியும் புதிதாக இயக்கப்போகும் படம் பற்றியும் வெளியாகிவரும் தவறான தகவல்களுக்கு சரியான விளக்கம் கொடுத்துள்ளார் கமல்.
பட்ஜெட் காரனங்களால் “மர்மயோகி” படம் நின்றுவிட்டதாகவும் இதனால் “தலைவன் இருக்கிறான்” என்ற புதிய படத்தை கமல் இயக்க கமல் தயராகி வருவதாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளுக்கு கமல் தரப்பில் இன்று முறையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது :- மர்மயோகி படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்தியில் துளியும் உண்மையில்ல. சில காரணங்களால் தற்போதைக்கு படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர ஒருபோதும் படத்தை கைவிடும் எண்ணம் இல்லை. சில தெளிவான முடிவுகளை திட்டமிட்ட பிறகு மீண்டும் மர்மயோகி படப்பிடிப்பு தொடரும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
அதேபோல் அடுத்து இயக்க இருக்கும் படத்தின் தலைப்பு “தலைவன் இருக்கிறான்” என சில பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. அப்படத்தின் பெயர் “தலைவன் இருக்கிறான்” என்பது சரி. இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்,நடிகர்,நடிகைகள் தேர்வுசெய்யும் பணி நடந்து வருகிறது. தொழில்நுட்பவியலாளர்கள் யாரென்பது முடிவானதும் முறையாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
முன்செல்ல